தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை வில்லி நடிகையான வந்தனா மைக்கேல் தற்போது மீண்டும் வில்லியாக ரீ- என்ட்ரி கொடுக்கிறார். ஆனந்தம் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாக வந்தனா தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தொடர்ந்து கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். 'வம்சம்' தொடரில் முதன்முறையாக வில்லியாக நடித்த போது அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து 'கல்யாணம் முதல் காதல் வரை', 'மெல்ல திறந்தது கதவு', 'பொன்மகள் வந்தாள்' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து அதிகம் பிரபலமானார். இடையில் சிறிது காலம் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த வந்தனா தற்போது மகராசி சீரியலில் மீண்டும் வில்லியாக நடிக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வரும் நடிகர் ரியாஸ் கானின் மனைவியாக வந்தனா நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. வந்தனாவின் ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.