பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

சின்னத்திரையில் டாப் நடிகை என பெயரெடுத்த ரச்சிதா மஹாலெட்சுமி தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ரச்சிதா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வீடியோவும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரக்சிதாவுக்கு விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவின.
இதை பார்த்து கடுப்பான ரச்சிதா, திருமண கோலத்தில் இருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்து, அது தான் நடித்து வரும் 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் இடம் பெற்றுள்ள காட்சி என விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த வீடியோவை வைத்து தவறான முறையில் வதந்திகளை பரப்பி வருபவர்களையும் கடுமையாக சாடியுள்ளார். ரச்சிதா அந்த பதிவில், 'இது வச்சு பொய்யான நியூஸ்லாம் பரப்ப வேண்டாம். நீங்க அட்டென்ஷன் கிரியேட் பன்றதுக்கு, நீங்க பணம் பன்றதுக்கு, உங்க போதைக்கு எங்கள (நடிகைகள) ஊறுகாய் ஆக்காதீங்க . எங்க பொழப்ப எங்கள நிம்மதியா பாக்க விடுங்க' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.