எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |
சின்னத்திரை ஆங்கர் அர்ச்சனா தமிழின் முன்னணி சேனல்களில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது, என்று சொல்லுமளவுக்கு பெயரெடுத்திருந்தார். ஆனால், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி கெட்டபெயரை பெற்று தந்தது. பிக்பாஸ் சென்ற அர்ச்சனாவை பலரும் வெறுத்து விமர்சித்தனர். இந்நிலையில், தற்போது ஊடகம் ஒன்றுக்கு சாராவும் அர்ச்சனாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது, சாராவிடம் அர்ச்சனா செய்ததில் பிடித்தது, பிடிக்காதது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய சாரா, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்தது மிகவும் பிடித்தது. ஆனால், அம்மா பிக்பாஸ் போனது பிடிக்கவில்லை. அதனால் தான் அவரை பற்றிய நெகடிவ் கமெண்டுகள் வந்தன. என் அம்மாவை பற்றி எனக்கு தெரியும். ஆனால், வெறும் 40 நிமிடத்தை பார்த்துவிட்டு எல்லோரும் அவரை ஜட்ஜ் செய்தார்கள். ஆனாலும், அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருக்கக்கூடாது' என்று கூறியுள்ளார்.