23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' தொடரின் முதல் புரோமோ வெளியான போதே, பிற்போக்குத்தனமான சீரியல் என்ற எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால், அதையும் தாண்டி சீரியல் தற்போது வெற்றிகரமாக பயணித்து ரசிகர்களின் குட் புக்கில் இடம்பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலின் புகழ் மேலும் அதிகரிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த தொடரின் நாயகியான பவித்ரா ஜனனிக்கு போன் செய்துள்ள அனுஷ்கா, 'தென்றல் வந்து என்னை தொடும்' தொடரை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறி, சீரியல் குழுவினர் பாராட்டியுள்ளார். இதனைபதிவிட்டுள்ள பவித்ரா, 'அனுஷ்கா முதலில் போன் செய்த போது ப்ராங்க் என்று நினைத்தேன். தொடர் குறித்து அவர் பாராட்டிய போது அவர் மீதான மரியாதை அதிகரித்தது. அவரிடம் பெற்ற பாராட்டுகள் என் இதயத்தில் பொறிக்கப்படும்' எனவும் சிலாகித்து கூறியுள்ளார்.