ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி வெல்லும் திறமை. நடுவர்களாக நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் தற்காப்பு கலை நிபுணருமான ஹுசைனி மற்றும் பிரபல நடன இயக்குனரான ஸ்ரீதர் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதன் இறுதிச்சுற்றில் துரோணா அகாடமி வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது. அந்த அணிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஜே.சி.டி அணிக்கு இரண்டாவதாக இடம் கிடைத்தது. அதற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. யோவா யோகா அகாடமி 3வது இடம் பிடித்தது அதற்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து நிக்கி கல்ராணி கூறியதாவது : நாட்டின் மூலை முடுக்கிலிருந்தும் திறமைசாலிகள் பங்கேற்றிருக்கும் இதுபோன்ற அற்புதமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன். துரோணா அகாடமி வெற்றி பட்டத்தை வென்றதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் திறமைக்கு அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்தது, இருப்பினும் இங்குள்ள ஒவ்வொரு திறமையும் தனித்துவமானது என்று நான் உணர்கிறேன். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்கனவே தங்கள் சொந்த துறையில் வெற்றி பெற்றவர்கள். கலர்ஸ் தமிழ் சேனலானது, வெல்லும் திறமை மூலம் திறமையான வல்லுனர்களின் தகுதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.