ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கான தேர்வும் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 9 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 17 பேர் போட்டியாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதில் சினேகா, ப்ரியா என்ற இரட்டை சகோதரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வானது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சினேகா, ப்ரியாவை விட திறமையான போட்டியாளர்கள் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதாகவும் ஆனால், டிஆர்பிக்காக விஜய் டிவி இரட்டையர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பரவலாக சோஷியல் மீடியாவி பேசப்பட்டு வருகிறது. எனினும், சிலருக்கு இரட்டையர்களின் என்ட்ரி ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் ஏற்கனவே பின்னணி பாடகர்களாவும் இருப்பதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 9 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.