பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மா கா பா மற்றும் ப்ரியங்கா ஜோடி இணைந்து சுவாரசியமாக தொகுத்து வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்ட போது ப்ரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக மைனா நந்தினி மா கா பா உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் வந்த ப்ரியங்கா நிகழ்ச்சியில் ஆங்கராக எண்ட்ரி கொடுத்ததால் நந்தினி வெளியேறினார். ஆனால் ப்ரியங்கா, பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுடன் மீட்டிங் என அடிக்கடி ப்ரேக் என கழன்று சென்றதால் ஒருவார எபிசோடிலேயே அவருக்கு பதிலாக மீண்டும் மைனா நந்தினி உள்ளே நுழைந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் ப்ரியங்கா ஆங்கராக என்ட்ரி கொடுத்துள்ளார். அதேசமயம் ஏற்கனவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மா கா பாவும் மைனா நந்தினியும் வெளியேறியுள்ளனர். மா கா பாவுக்கு பதிலாக கலக்கப் போவது யாரு குரேஷி ப்ரியங்காவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இது என்ன உள்ளே வெளியே ஆட்டம் என ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர். விஜய் டிவி நிகழ்ச்சி வரலாற்றிலேயே ஆங்கர்கள் இந்த அளவுக்கு ஸ்வாப் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இந்த வாரம், தல - தளபதி ரவுண்டாக ஸ்பெஷல் எபிசோடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா கலந்து கொள்கிறார். ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.