ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிக்பாஸ் வீட்டில் ஷிவின், கதிர், குயின்சி என்றொரு முக்கோண காதல் கதை சில நாட்கள் ஓடியது. சிவின், கதிர் மீதான தனது காதலை மறைமுகமாக சொல்ல கதிர் அதை புரியாதது போலவே நடித்து மறுத்துவிட்டார். இதனையடுத்து தான் குயின்சியும் கதிரும் நெருக்கமாக சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைபார்த்து பொதுமக்களே குயின்சியும் கதிரும் காதலிக்கிறார்கள் என்றே நினைத்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள குயின்சி, ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் கதிரை உண்மையாக காதலித்தீர்களா? என்று கேட்க, 'சிவினை வெறுப்பேத்தவே நானும் கதிரும் பிராங்க் செய்தோம். உண்மையாக காதலிக்கவில்லை' என்று கூறினார்.