இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 70 நாட்களை கடந்துவிட்டது. 11 நபர்கள் எலிமினேட் ஆகியுள்ள நிலையில் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி 10 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இதில், சின்னத்திரையின் நம்பர் 1 நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி தொடர்ந்து ஏதாவதொரு கதையை சொல்லி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்று வருகிறார். அந்த வகையில் ரச்சிதா தற்போது, தன் பெற்றோர்களே தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய தினம் (டிச,20) வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில் சக ஹவுஸ்மேட்களுடன் பேசிக்கொண்டிருக்கும் ரச்சிதா, 'அப்பா டிரைவர், அம்மா படிக்காதவர். அவங்கள பார்த்து வளரும் போது நிறைய சண்டை மட்டும் தான் பார்த்துருக்கேன். பொண்ணு படிக்க மாட்டேங்கிறாளேன்னு சொல்லிட்டு நிறைய வாட்டி என் அம்மாவே என் கழுத்த நெரிச்சு நீ செத்துரு நீ செத்துருன்னு சொல்லுவாங்க' என சொல்லி கண்கலங்குகிறார். இந்த புரோமோ தற்போது வைரலாகி அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னதாக ரச்சிதா தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் கணவருடனான பிரிவையும் குறித்து கூறியிருந்தார். தொடர்ந்து சமீபத்தில் கூட பெண் குழந்தையை தத்தெடுப்பேன் என கூறியிருந்தார். இவ்வாறாக பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா தொடர்ந்து தனது வாழ்வின் சோகக்கதைகளை கூற நேயர்களோ 'ரச்சிதாவுக்கு இவ்வளவு கொடுமை நடந்திருக்கா?' என அவருக்காக பரிதாபப்பட்டு வருகின்றனர்.