இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் “ராஜா ராணி-2” தொடரில் நடித்தார். லவ் இன்சூரன்ஸ், ட்ரூத் ஆர் டேர் ஆகிய குறும்படங்களிலும் “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி”என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தரண் குமார் இசையில் வெளியிட்ட ஒரு நிமிடப் பாடலான “தமாத்துண்டு”எனும் ஆல்பத்தில் நடித்தார். தற்போது சினிமாவிற்கு வந்திருக்கிறார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் ஒரு தமிழ்ப் பெண். இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு திரைத்துறையில் சிறந்த கதாநாயகியாக வலம் வரவேண்டும் என்பதே ஆசை. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்கிறார் அர்ச்சனா.