படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ராஜா ராணி 2 தொடரில் கடந்த ஒருவருடமாக ஹீரோயினாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவரே விலகினாரா? அல்லது வெளியேற்றப்பட்டாரா? என நேயர்கள் பலரும் குழம்பியுள்ளனர். அதேசமயம் ரியாவுக்கு பதில் யார் புதிய சந்தியாவாக நடிக்க போகிறார் எனவும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ஆஷா கவுடா இனி சந்தியாவாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' தொடரின் மூலம் அறிமுகமான ஆஷா கவுடா அந்த தொடரில் நந்தா மாஸ்டருடன் சேர்ந்துகொண்டு 'ஊம் சொல்றியா மாமா' பாடலுக்கு செமயாக ஒரு குத்து குத்தியிருப்பார். அப்போதே இளைஞர் வட்டாரம் ஆஷா கவுடாவிடம் சரண்டராகிவிட்டது. கோகுலத்தில் சீதை தொடர் முடிவுற்ற நிலையில் ஆஷா கவுடா எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகவில்லை. தற்போது அவர் சந்தியாவாக ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதால் அவரது ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.