கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான ராஜா ராணி சீசன்2வில் ஆல்யா மானசா விலகியதற்கு பின் ரியா விஸ்வநாத் என்ற நடிகை கடந்த ஒருவருடமாக நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் திடீரென ராஜா ராணி 2வில் இனி நான் இல்லை என சோகமாக வீடியோ வெளியிட்டு தான் விலகியதை ரசிகர்களிடத்தில் தெரியப்படுத்தினர். தற்போது புது சந்தியாவாக ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரியாவிடம் ரசிகர்கள் சிலர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணங்களை பலவாறாக கேட்டுள்ளனர். 'திருமணத்தின் காரணமாக விலகினீர்களா?' என ரசிகர் ஒருவர் கேட்க, 'தனக்கு திருமணமாக 2 முதல் 3 வருடம் ஆகுமென்றும் திருமணத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகவில்லை' என்று தெளிபடுத்தியிருந்தார்.
மற்றொரு ரசிகர் 'பிரைம் டைம் சீரியலை விட்டு ஏன் விலகினீர்கள்?' என்று கேட்டிருந்தார். அதற்கு ரியா,'எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது' என்று கூற ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரியாவின் பதில்களிலிருந்து ரியா சீரியலை விட்டு விலகவில்லை, வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று புரிய வருகிறது. இதனால் ரியாவின் ரசிகர்களில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.