இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென அந்த சீரியலை விட்டு விலகியதாக தகவல் வெளியானது. சாய் காயத்ரி விலகியது உண்மையா? என ரசிகர்கள் பலரும் நேரடியாகவே சாய் காயத்ரியின் இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்டனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சாய் காயத்ரி, 'ஆமாம், நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு இனிமேல் நலமாக இருக்காது. அது எனக்கும் எனது கேரியருக்கும் நல்லதல்ல. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது இந்த முடிவுக்கு மரியாதை அளித்த விஜய் டிவிக்கும் நன்றி' என கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வீஜே தீபிகா இணைந்துள்ளார்.