இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் டைட்டில் ரோலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு அண்மையில் அவர் நடித்த, நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதால் அவர் செவ்வந்தி தொடரில் இனி தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவருக்கு பதில் அபியும் நானும் சீரியலில் வாத்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரம்யா கவுடா இனி செவ்வந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் ரம்யாவும் தனது இண்ஸ்டாகிராமில் சன் டிவியில் தான் மீண்டும் நடிக்க இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.