விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

முள்ளும் மலரும் என்ற டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷாலினி. இவர் சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து உள்ளார். ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷாலினிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவர் ரியாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில் ஷாலினிக்கு தற்போது விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதையடுத்து அதை போடோ சூட் நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛குரல் அற்றவர்களாக தங்களை உணர்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. மோசமான திருமணத்தை விட்டு விடுவது பரவாயில்லை. காரணம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள். உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் . உங்களது வாழ்க்கையை கட்டுப்படுத்தி உங்களுக்காகவும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் தேவையான மாற்றங்களை செய்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வி அல்ல. உங்களுக்கு வாழ்க்கையில் நேர்மையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்பு முனை. இந்த திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு பெரிய அளவில் தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். என்னைப் போன்ற துணிச்சலான பெண்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்'' என்று பதிவிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை ஷாலினி.