படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் சீக்கிரமாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாகவே பிரிந்தும் விட்டனர். அவர்கள் பஞ்சாயத்து தான் சோஷியல் மீடியாவில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சம்யுக்தா குறித்து விஷ்ணுகாந்த் சில பேட்டிகளில் பேசியிருந்ததை தொடர்ந்து சம்யுக்தா அண்மையில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையேயான பிரச்னை குறித்து விரிவாக பேசியிருந்தார். அதில், விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் விஷ்ணுகாந்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். விஷ்ணுகாந்தும் நேற்று (மே 17) மாலை 6 மணிக்கு லைவ்வில் வந்து உண்மையை பேசப்போவதாக போஸ்ட் செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று மதியமே இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த சம்யுக்தா, ‛சம்யுக்தாவின் உறவினர் ஒருவருக்கு போன் செய்து சம்யுக்தா பற்றிய பாஸ்ட் லைப் ரகசியங்களும், சம்யுக்தாவின் 4 மணி நேர வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்ந்து என்னை பற்றி சம்யுக்தா பேசினால் அதை வெளியிடுவேன்' என்று விஷ்ணுகாந்த் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சம்யுக்தா போலீசில் புகார் அளித்ததாகவும் ஆனால், விஷ்ணுகாந்த் விசாரணைக்கு வரவில்லை. சம்மனையும் வாங்கவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.