துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகை திவ்யா ஸ்ரீதர், செவ்வந்தி சீரியலில் நடித்து வந்தார். அவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன்காரணமாக சில நாட்கள் செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் நடிக்கவில்லை. அவர் சீரியலை விட்டு விலகிவிட்டதாக பல வதந்திகள் கிளம்பியதால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர். இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தனது கைக்குழந்தையுடன் திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். திவ்யா ஸ்ரீதர் தனது குழந்தையுடன் கெத்தாக காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இறங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'அம்மா செய்யாத வேலையோ, அவள் விரும்பாத பணியோ, முத்தமிடாத குழந்தையோ இல்லை. வேலைக்குச் செல்லும் அம்மா எல்லாவற்றையும் செய்கிறாள். மீண்டும் வேலைக்குச் செல்கிறேன்', எனப் பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திவ்யா ஸ்ரீதருக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.