பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
நடிகை திவ்யா ஸ்ரீதர், செவ்வந்தி சீரியலில் நடித்து வந்தார். அவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன்காரணமாக சில நாட்கள் செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் நடிக்கவில்லை. அவர் சீரியலை விட்டு விலகிவிட்டதாக பல வதந்திகள் கிளம்பியதால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர். இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தனது கைக்குழந்தையுடன் திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். திவ்யா ஸ்ரீதர் தனது குழந்தையுடன் கெத்தாக காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இறங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'அம்மா செய்யாத வேலையோ, அவள் விரும்பாத பணியோ, முத்தமிடாத குழந்தையோ இல்லை. வேலைக்குச் செல்லும் அம்மா எல்லாவற்றையும் செய்கிறாள். மீண்டும் வேலைக்குச் செல்கிறேன்', எனப் பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திவ்யா ஸ்ரீதருக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.