தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னையில் ஏற்கனவே கனமழை காரணமாக சாலைகள் மோசமாக இருக்கிறது. அதில், வேன் டிரைவர் ஒருவர் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பொறுப்பில்லாமல் வேகமாக செல்கிறார். இது மட்டுமல்லாமல் தனது செல்போனில் பேசிக்கொண்டே வேனை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இதைபார்த்த பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகனான நடிகரான அருண் பிரசாத் அந்த டிரைவரை மடக்கி பிடித்து மெதுவாக ஓட்டும்படி அறிவுரை செய்ய, அதற்கு அந்த வேன் டிரைவர் அருண் பிரசாத்தை அநாகரீகமாக திட்டுகிறார். இதை வீடியோவாக எடுத்துள்ள அருண் பிரசாத் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததுடன், அந்த வேன் டிரைவர் மீதும் போலீஸில் புகார் அளித்துள்ளார். அருண் பிரசாத்தின் சமூக பொறுப்பை பாராட்டி சிலர் அவர் நிஜ வாழ்விலும் ஹீரோ ஆகிவிட்டதாக வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.