இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'1987ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ராமாயணம். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று காத்துக்கிடந்து பார்த்த தொடர். ஒவ்வொரு டிவிக்கு முன்னாலும் ஏராளமான மக்கள் அமர்ந்து பார்த்த தொடர். அந்த காலத்திலேயே ராமானந்த சாகர் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த தொடர். இதில் அருண் கோவில் ராமராகவும், தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர்.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்ற உலக சாதனையை படைத்தது. கொரோனா ஊரடங்கின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி 'ராமாயணம்' தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது. இந்த நிலையில் இந்த தொடரை 3வது முறையாக மீண்டும் ஒளிபரப்பாகிறது. ஷெமாரூ டிவியில் இந்த தொடர் இன்று (ஜூலை 3) முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடர் மொத்தம் 78 எபிசோட்களை கொண்டது. 'ஆதிபுருஷ்' படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நேரத்தில் 'ராமாயணம்' மீண்டும் ஒளிபரப்பாவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.