ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியின் டாப் ஷோக்களான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஒருமுறை வந்துவிட்டால் கட்டாயம் அவர்களுக்கு சினிமா கதவுகள் திறக்கும் என பலரும் அந்நிகழ்ச்சிகளில் முகம்காட்ட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை உறுதிப்படுத்துவது போல் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஸ்ருதி பெரியசாமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், 'மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் நான் பிரபலம் கிடையாது. ஆனால், இப்போது எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பலர் தங்கள் புரொபைலை எடுத்துக் கொண்டு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நான் யாரிடமும் வாய்ப்புகள் கேட்டு போனதில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் பிக்பாஸ் பார்த்து கிடைத்தது தான்' என்று கூறியுள்ளார்.