இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல நடிகை மற்றும் வீஜேவான ஸ்வர்ணமால்யா ஒரு காலத்தில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவிலும் சின்னத்திரை சீரியல்களிலும் பல முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். தற்போது திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் ஸ்வர்ணமால்யா பரதநாட்டிய பள்ளியை ஆரம்பித்து பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சோசியல் மீடியா மிகவும் வக்கிரமாக இருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சோசியல் மீடியாவில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. மற்றவருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பேசினால் 25 பேராவது கழுவி ஊற்றுவார்கள். முகத்தை மூடிக்கொண்டு கோழைத்தனமாக சண்டை போடுகிறார்கள். இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. முன்கூட்டியே தப்பாக எடை போட்டு கமெண்ட் செய்கிறார்கள். இப்போது உள்ள காலத்தில் யாருக்கும் தனி மனித ஒழுக்கம் இல்லை. இந்த சமுதாயம் வக்கிரமாக மாறிக்கொண்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.