சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மிக்ஜாம் புயலால் கடந்தவாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், சின்னத்திரை ஷூட்டிங்கிறாக போடப்பட்ட பல சீரியல்களுக்கு தேவையான செட்டுகளும் சேதம் அடைந்துள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா, கனா காணும் காலங்கள் என பல்வேறு ஹிட் தொடர்களின் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் கனமழையால் ஏற்கனவே போடப்பட்டிருந்த வீடு, கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என பல செட்டுகள் சேதாரமடைந்துள்ளன. இதை சரி செய்யவே 10 நாட்கள் ஆகும் என்பதால், இந்த செட்டில் நடக்க வேண்டிய சீரியல்களின் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.