ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி. தவிரவும் சினிமா, வெப் தொடர்கள் என பிசியாக வலம் வரும் இவர், ஒரு பி.எச்டி பட்டதாரி ஆவார். மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று வரும் காயத்ரி அடிக்கடி ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ விவகாரம் குறித்து 'நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை குறித்து இப்போது சொல்லி வருகிறார்களே?' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காயத்ரி 'ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அப்போதே அதை பற்றி சொல்லி விட வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு சொல்லி ஆறுதல் தேடுவது மிகவும் தப்பு' என்று கூறியுள்ளார். மேலும், 'அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைகளுக்கு காரணம் பெண்களின் வீக்னஸ் தான். மேலும் அட்ஜெஸ்மெண்ட் செய்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி ஏன் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்?' என்று முன்னதாக அளித்த சில பேட்டிகளில் காயத்ரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.