'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமான பாலா தற்போது மக்கள் முன்னால் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ், குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை என வரிசையாக செய்து வந்த பாலா அண்மையில் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக சொந்த செலவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் பாலா செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாகவும், குறிப்பாக அவர் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் சக்திகள் இருப்பதாகவும் திராவிட அரசியல் பேசுவோர் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதுகுறித்து பதிலளித்துள்ள பாலா, 'நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாக விமர்சனம் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆமாம் இருக்கிறார்கள். என்னவென்றால் அவமானம், கஷ்டம் ஆகியவை தான். இவையெல்லாம் எனக்கு பின்னால் இருப்பதால் தான் நான் இந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.