திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கும் முன்னே செப் வெங்கடேஷ் பட் அதிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் விலக முற்றிலும் புதிய குழுவுடன் சீசன் 5 ஆரம்பமானது. இந்நிலையில் கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன், குக் வித் கோமாளி சீசன் 5லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ளமாட்டேன்' என கூறியுள்ளார்.
இதுபோல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனத்துடன் மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக டாப்பு குக்கு டூப்பு குக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பால் குக் வித் கோமாளி சீசன் 5 முந்தைய சீசன்களை போல வெற்றி பெறுமா? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.