இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், இனி சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருந்தார். அதற்கு காரணம், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததால் ஜெய் பீம் போன்ற சில ஹிட் படங்களின் வாய்ப்புகளை இழந்தது தான். அதன்பின் எவ்வளவு தீவிரமாக தேடியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கருடன் படத்தில் ரோஷினி ஹரிபிரியன் நெகட்டிவ் ரோலில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ரோஷினியின் சினிமா என்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் ரோஷினி இதுபோல் நல்ல கதைகளை, கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களின் அட்வைஸ் குவிந்து வருகிறது.