விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

தமிழ் சின்னத்திரையில் கண்ணான கண்ணே சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிமிஷிகா. இந்த தொடருக்கு பின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தாலும் எந்தவொரு சீரியலிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிமிஷிகா, கார்த்திக் வாசுவுக்கு ஜோடியாக புனிதா என்கிற புதிய சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கிறது. அதுவும் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளிடம் தான் அதிகம் அட்ஜெஸ்ட்மென்டுக்கு கேட்கப்படுகிறது. இது சில சமயங்களில் அந்த சீரியலின் இயக்குனர்களுக்கே தெரியாமல் நடக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும் இது போல பெண்களை கார்னர் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் ஆண்களுக்கும், அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் பெண்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பேட்டியில் நிமிஷிகா பேசியுள்ளார்.