இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சின்னத்திரையில் கண்ணான கண்ணே சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிமிஷிகா. இந்த தொடருக்கு பின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தாலும் எந்தவொரு சீரியலிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிமிஷிகா, கார்த்திக் வாசுவுக்கு ஜோடியாக புனிதா என்கிற புதிய சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கிறது. அதுவும் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளிடம் தான் அதிகம் அட்ஜெஸ்ட்மென்டுக்கு கேட்கப்படுகிறது. இது சில சமயங்களில் அந்த சீரியலின் இயக்குனர்களுக்கே தெரியாமல் நடக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும் இது போல பெண்களை கார்னர் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் ஆண்களுக்கும், அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் பெண்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பேட்டியில் நிமிஷிகா பேசியுள்ளார்.