ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை சீரியல்களுக்கு சினிமாவை விட நல்ல மவுசு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சீரியலையே சினிமாவை போல் 2:30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குழுவினர் இறங்கியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா முரளிதரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் வருகிற செப்டம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடந்து 2:30 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது. சினிமாவில் வருவது போலவே இரண்டரை மணி நேரத்தில் காதல், வில்லன், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் அடக்கி இதற்கென ஸ்பெஷலாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.