பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'வாணி ராணி, அழகு' ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சாரா என்கிற ஜெனிபர் பிரியா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மன்னர் வகையறா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பெரிதளவில் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தாத சாரா, மேக்கப் ஆர்டிஸ்டாக பல சின்னத்திரை பிரபலங்களை அலங்கரித்துள்ளார். இவரது இரண்டாவது மேக்கப் ஸ்டூடியோவை நடிகர் விஜய் சேதுபதி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவரை சாரா திருமணம் செய்ய உள்ளார். துநேசன் சிங்கப்பூரில் பைலட்டாக வேலை பார்ப்பதோடு அங்கேயே குடியுரிமையும் வைத்துள்ளார். எனவே, திருமணத்திற்கு பிறகு சாரா தனது மேக்கப் அகாடமியை சிங்கப்பூரிலேயே தொடரவுள்ளார். மேலும், சின்னத்திரையில் மேக்கப், நடிப்பு என எந்த வாய்ப்பு வந்தாலும் தமிழகத்திற்கு வந்து செல்லவும் முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறாராம்.