தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாமல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகளோடும், கேம்களுடனும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 28 நாட்களை கடந்துள்ள இந்த கேம் ஷோவில் இந்த வார எவிக்சனில் அன்ஷிதா வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விஜய் சேதுபதி இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துவிட்டார்.
அதேசமயம் ஆறு புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைகின்றனர். முன்னாள் போட்டியாளரான சுஜா வருணேவின் கணவர் சிவாஜி தேவ் என்ற சிவக்குமார், மாடல் ரியா தியாகராஜன், நடிகர் ராணவ், வீஜே வர்ஷினி வெங்கட், பேச்சாளர் மஞ்சரி மற்றும் தமிழும் சரஸ்வதி சீரியலின் வில்லன் நடிகர் ராயன் ஆகியோர் 28ம் நாளில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் புது போட்டியாளர்கள் வருகை மேலும் ரணகளத்தை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.