சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான ரோஷினி ஹரிப்பிரியன் தமிழில் பல ஹிட் திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டார். அதில் ஒன்று தான் ஜெய்பீம். இதனையடுத்து சீரியலை உதறி தள்ளிவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது மலையாள நடிகை ஷெல்லியுடன் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஷெல்லியின் தோளில் சாய்ந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ள ரோஷினி அந்த புகைப்படத்திற்கு அம்மா, மகள், தேநீர் என ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். இதிலிருந்து இந்த திரைப்படமானது அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயான எமோஷனல் டிராமாவாக இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. இதனையடுத்து ரோஷினியின் சினிமா கேரியர் சக்ஸஸ் ஆக ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.