பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
சுந்தரி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ். சினிமாவில் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேமராமேன் சுருளி என்பவரை திருமணம் செய்து கொண்ட கேப்ரில்லாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதையடுத்து குழந்தையின் கையை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
அதோடு, அவர் வெளியிட்டுள்ள பதிவில், உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே, இவ்வுலகம் உனக்கானது மகளே. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி. அவர்கள் இன்றி சுகப்பிரசவம் சாத்தியமில்லை. எனக்கு அன்பு கொட்டி கொடுக்கும் மக்களின் பிரார்த்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள். இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிரார்த்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு கேப்ரில்லா...'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.