சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாவிட்டாலும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் 8ல் வரும் விளையாட்டுகளும் விஜய் சேதுபதியின் செயல்பாடுகளும் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் பேசிய தீபக், ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தீபக் மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பினர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ஆகியோர் மீதும் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.