ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
இங்கே தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது பற்றி கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பரபரப்பு ஓடிக் கொண்டிருக்க, அங்கே மலையாளத்திலும் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பிரித்விராஜ் டைரக்ஷனில் மோகன்லால் நடித்த எம்புரான் படம் கூட சென்சாரில் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து தான் வெளியானது. ஆனால் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க படத்தின் இயக்குனர் சத்யன் அந்திக்காடு தான் காரணம்.
ஏனென்றால் குடும்பப்பாங்கான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். 'என்னும் எப்பொழுதும் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரது கூட்டணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வரும் மார்ச் 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.