மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக வெற்றி பெற்று பொறுப்பேற்றார். இத்தனை வருடங்களில் தலைமை பொறுப்புக்கு வரும் முதல் பெண் இவர் தான். இந்த நிலையில் தற்போது புதிய நடிகர் சங்கத்தின் முதல் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டிய ஸ்வேதா மேனன், இதில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது மீ டு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய சமயத்தில் தொடர்ந்து சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, நடிகர் சங்கத்தில் உள்ள பெண் உறுப்பினர்களிடம் கருத்து கேட்பதற்காக பிரபல ஹோட்டல் ஒன்றில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பெண் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அந்த மெமரி கார்டு காணாமல் போய்விட்டது என அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அலட்சியமாக கூறினார்கள். இந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டலில் நடைபெற்ற கூட்டம் தொடர்பான மெமரி கார்டு காணாமல் போன விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு கமிட்டி ஒன்றை அமைத்துள்ள ஸ்வேதா மேனன், இந்த விவகாரத்தை தாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.