திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சின்னத்திரையில் நீண்டகாலமாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட அஞ்சனாவிற்கு ஒரு குழந்தை உள்ளது. பல தொகுப்பாளினிகள் சினிமாவிலும் ஆளுமை செலுத்தி வரும் நிலையில் அஞ்சனா தொடர்ந்து சின்னத்திரையிலேயே அங்கம் வகித்து வருகிறார். ஆனபோதும் சினிமா நடிகைகளுக்கு இணையாக தனது சோசியல் மீடியாவில் அவ்வப்போது விதவிதமாக எடுக்கப்பட்ட போட்டோஷுட்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர், நீண்டகாலமாக சின்னத்திரை பிரபலமாக இருந்தும் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லையே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அஞ்சனா பதிலளிக்கையில், ''எனக்கு நடிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை. அதனால் தான் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. மேலும், சினிமா -சின்னத்திரை என்றெல்லாம் நான் பிரித்து பார்ப்பதுமில்லை. எனக்கான இடம் இதுதான் என்பதால் அதில் எனது பணியை சிறப்பாக செய்வதில் மட்டுமே என்னுடைய கவனம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்றார்.