திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
ஜீ தமிழ் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'செம்பருத்தி'. இத்தொடரில் செம்பருத்தியாக நடிக்கும் மலையாள நடிகை ஷபானாவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் நடிக்கும் ஆர்யன் என்பவருக்கும் காதல் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஆர்யன் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்தார். அப்போது ஒரு ரசிகை, “நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா ?” எனக் கேட்டதற்கு 'இவங்களுக்கு என்ன சொல்லட்டும்' என ஷபானாவை டேக் செய்து பதிலளித்துள்ளார். அதற்கு ஷபானா 'என்னுடையது' என கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் ஒருவர், 'உங்களுக்கு மலையாளம் தெரியுமா' எனக் கேட்டதற்கு 'கத்துக்கிட்டு இருக்கேன்' என பதிலளித்துள்ளார்.
மற்றொருவர், “செம்பருத்திய பிடிக்கும்னு சொல்லிட்டு எதுக்கு ரோஜா கூட ரொமான்ஸ் பண்றீங்க பிரண்ட்” எனக் கேட்டதற்கு, 'அதை கொடுத்தவங்க செம்பருத்தி” என காதலுடன் பதிலளித்துள்ளார்.
இந்த சாட்டிங்கை வைத்து இருவரும் காதலர்கள் என ரசிகர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். விரைவில் இருவரும் தங்களது காதலை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.