சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடர் தமிழும் சரஸ்வதியும். சரஸ்வதியாக நக்ஷத்ரா நடிக்கிறார். தமிழாக தீபக் நடிக்கிறார். மீரா கிருஷ்ணன் - தமிழின் தாயாகவும் , ராமச்சந்திரன் - தமிழின் அப்பாவாகவும் நடிக்கிறார்கள், பிரபு - சரஸ்வதியின் அப்பாவாகவும், ரேகா - சரஸ்வதியின் அம்மாவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தர்ஷனா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
சரஸ்வதி, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக, சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் ஒரு பெண். ஆனால் சரஸ்வதிக்கு படிப்புதான் ஏறாது. பிளஸ் 2 தேர்வை 8 முறை எழுதியும் பாசாகாதவர். இதனால் அப்பாவின் அர்ச்சனையில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.
தமிழ் என்ற தமிழ்செல்வன் படிக்கும் ஆர்வம் கொண்டவர், ஆனால் அதற்கான வசதி இல்லாதாவர். இதனால் படிக்காத தன் மகனுக்கு படித்த ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க நினைக்கிறார் அவரது தாயார். இப்படி வெவ்வேறு துருவங்களான சரஸ்வதியும், தமிழும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதுதான் தொடரின் கதை.
கொரோனா காலத்திலும் சுறுசுறுப்புடன் நடந்து வந்த இதன் படப்பிடிப்புகளால் 20 எபிசோட் வரை தயாராகி விட்டது என்கிறார்கள். வருகிற 12ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சேனல் அறிவித்துள்ளது.