தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் குழந்தைகளுக்கான புதிய ரியாலிட்டி ஷோவாக தெறி பேபி ஒளிப்பரப்பாக உள்ளது. இதை வீஜே ரக்ஷ்னுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு அடுத்தபடியாக ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதிலும் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு அதை தொகுத்து வழங்கும் வீஜேக்களின் பங்கு முக்கியமானது. சிவ கார்த்திகேயன், டிடி, தீபக், ரம்யா தொடங்கி பலர் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
அந்த வகையில் திருமணத்துக்கு பின் வீஜே வேலைக்கு ஓய்வு கொடுத்த மணிமேகலை, மீண்டும் வீஜே ஆகுமாறு அவர்கள் ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அவரும் மீண்டும் வீஜே ஆகும் விருப்பத்தையும், ரக்ஷனுடன் இணைந்து பணிபுரியும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது விருப்பத்திற்கு செவி சாய்த்துள்ள டிவி நிர்வாகம் இந்த கலாட்டாவான காம்போவினை குழந்தைகள் ஷோவில் களமிறக்கியுள்ளது. குழந்தைகளின் சுட்டித் தனத்துடன் தெறிக்க விட வருகிறது இந்த புதிய காம்போ.