மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகியுள்ள புது நடிகை தான் இனி வெண்பா என ரசிகர்கள் பேசி வந்த நிலையில், வெண்பா கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலேயே அதிகம் பிரபலமான கதாபாத்திரங்களில் வெண்பா என்கிற வில்லி கதாபாத்திரமும் ஒன்று. வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவுக்கு ஒருபுறம் அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் ரசிகர்களும் குவிந்து வந்தாலும், அவரை உண்மையான வில்லியாகவே நினைத்து திட்டுபவர்களும் ஏராளம். அந்த அளவுக்கு அவர் தனது நடிப்பு திறனில் ஜொலித்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரசிகர்களால் வெண்பா கதாபாத்திரத்தில் வேறுயாரையுமே பொருத்தி பார்க்க முடியாத அளவுக்கு கேரக்டருடன் ஒன்றிவிட்ட பரீனாவை ரசிகர்ளும் வில்லி, வெண்பா எனவே செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் கருவுற்ற அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அதேசமயம் சீரியலுக்குள் சல்மா அருண் என்ற புதிய நடிகை என்ட்ரியாகவே இவர் தான் புது வெண்பா என பார்வையாளர்கள் நினைத்தனர். ஆனால், பரீனாவின் சமூக ஊடகமொன்றில் லைவ்வில் வந்த சல்மா அதை மறுத்து, தான் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்க வரவில்லை எனவும் டாக்டர் ப்ரியா கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார். அதேபோல் உங்க வில்லி வெண்பா ஷாட்டிற்கு ரெடியாகிறார் எனவும், மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் பரீனா பக்கம் கேமராவை திருப்பி காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, நடிகை பரீனா தான் மட்டுமே கர்ப்பமாக இருப்பதாகவும் வெண்பா கர்ப்பமாக இல்லை எனவும் கூறி தான் சீரியலில் தொடர்ந்து நடிப்பதை உறுதி செய்திருந்தார். மேலும் தனது உடல்நிலை ஷூட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பதாகவும் கூறியிருந்தார்.