இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் புரோமோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். வைரலாகி வரும் இந்த புரோமோவால் நிகழ்ச்சி குறித்தான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு அடுத்தப்படியாக ரியாலிட்டி ஷோக்களுக்கு இடையேயும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜி தமிழும் 'சர்வைவர்' என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவை தற்போது தமிழில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த போட்டியில் தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் அங்கு நிலவும் சூழ்நிலைகளை சமாளித்து அவர்களே அனைத்தையும் தாக்கு பிடித்து வாழ வேண்டும். மற்ற சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களை முன்னணி ஹீரோக்கள் தொகுத்து வழங்குவது போலவே, 'சர்வைவர்' நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரோமோவை சிவகார்த்திகேயன் அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. புரோமோவில் பேசும் அர்ஜூன், 'பரிசு ஒரு கோடி... அதை கஷ்டப்படாமல் ஜெயிக்க முடியாது' என்று கூறுகிறார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மி, நந்தா, வனிதா விஜயகுமார், கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், விதியுலேகா, விஜே பார்வதி, ஷாலு ஷம்மு, அனிகா சுரேந்திரன், சஞ்சனா சிங் ஆகிய 12 போட்டியாளர்கள் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தொலைகாட்சி நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கவுள்ளது.