'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
பாக்கியலெட்சுமி சீரியல் வெற்றிகரமாக 300-வது எபிசோடை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலெட்சுமி சீரியல் உள்ளது. தற்போது இந்த சீரியல் 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் புரோமோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்த புரோமோவில் நாம் காண்பது பாக்கியலெட்சுமி சீரியலை பார்த்து இன்ஸ்பையர் ஆன கூட்டுக்குடும்பத்தின் நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் பேசும் ஒரு வயதான தயார் பாக்கியலெட்சுமி சீரியலில் பாக்கியாவின் கதாபாத்திரத்தை பார்த்து இண்ஸ்பையர் ஆகி தான், அவர் ஆட்டோ ஒட்டுவதாகவும், உணவு சேவை வழங்கி வருவதாகவும் கூறினார். இந்த நெகிழ்ச்சியான பேச்சுடன் ஆரம்பமாகும் புரோமோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாக்கியலெட்சுமி 300 சிறப்பு நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.