திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
சீரியல் நடிகைகள் பலரும் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அலப்பறைகள் செய்து கொண்டிருக்க எந்தவித அலட்டலும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் தன் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை ரேவதி.
இயக்குனர் திருமுருகன் எளிய மனிதர்களின் வாழ்வை தன் கதையில் படமாக்குவதை போலவே அதில் நடிப்பவர்களையும் எதார்த்த மனிதர்களாகவே தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. வெள்ளித்திரையிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பின் நடிப்பதற்கு டாட்டா சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார். ரேவதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.