பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் ஆரம்பம் முதலே சொதப்பி வருகிறது. முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தவர் வைஷாலி தனிகா தான். ஆனால், திடீரென வைஷாலி தனிகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக விஜே தீபிகா நடிக்க ஆரம்பித்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தீபிகாவுக்கு ஏற்பட்ட சர்ம பிரச்னை காரணமாக அவரும் நீக்கப்பட்டார். தற்போது கண்ணனுக்கு ஜோடியாக சாய் காயத்ரி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாய் காயத்ரி கண்ணனை கம்பேர் செய்யும் போது மிகவும் மெச்சூராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சாய் காயத்ரியும் மாற்றப்படலாம் என்ற செய்தியும் உலா வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் நடிப்பீர்களா'? என தீபிகாவின் ரசிகர் இண்ஸ்டாவில் கேள்வி எழுப்ப, அதற்கு 'வாய்ப்பே இல்லை' என ஒரே போடாக போட்டுள்ளார் தீபிகா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு சரியான ரீப்ளேஸ்மெண்ட் கிடைக்காமல் சீரியல் குழுவினர் திணறி வருகின்றனர்.