இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
டிவி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் ஒன்று 'சந்திரலேகா'. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே வேறு எந்த சீரியலும் தொடாத அளவிற்கு 2000 எபிசோடுகளை கடந்து இமாலய சாதனையும் படைத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் கதையின் நாயகிகள் இண்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை செய்துள்ளனர்.
சந்திரலேகா தொடரில் ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ, சந்தியா மற்றும் ராணி ஆகிய நடிகைகள் தான் மெயின் கதாபாத்திரங்களில் நடித்து கதையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் சந்திரலேகா தொடர் 2000 எபிசோடுகளை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் நால்வரும் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷனில் இன்னும் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர். ஒருபுறம் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தான் என்றாலும் கதையை எப்பதான் முடிப்பீங்க என கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.