படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

டிவி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் ஒன்று 'சந்திரலேகா'. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே வேறு எந்த சீரியலும் தொடாத அளவிற்கு 2000 எபிசோடுகளை கடந்து இமாலய சாதனையும் படைத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் கதையின் நாயகிகள் இண்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை செய்துள்ளனர்.
சந்திரலேகா தொடரில் ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ, சந்தியா மற்றும் ராணி ஆகிய நடிகைகள் தான் மெயின் கதாபாத்திரங்களில் நடித்து கதையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் சந்திரலேகா தொடர் 2000 எபிசோடுகளை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் நால்வரும் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷனில் இன்னும் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர். ஒருபுறம் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தான் என்றாலும் கதையை எப்பதான் முடிப்பீங்க என கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.