வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

மாநாடு வெற்றிப்படத்தை அடுத்து, மன்மதலீலை என்ற 'அடல்ட்' படத்தை கொடுத்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு, அப்பா தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
மன்மத லீலை என்ன மாதிரியான கதை?
'எல்லா ஆண்களும் ராமர்களே; மாட்டிக் கொள்ளும் வரை. இப்படிக்கு மாட்டிக் கொண்டவர்கள்' இது தான் படத்தின் கதை. அடல்ட் படம் தான். ஆனாலும் குடும்பத்தோடு, நண்பர்களோடு பார்க்கலாம். படத்தை பார்த்ததும், அவரவர் பழைய நினைவலைகளை இப்படம் தட்டி எழுப்பும். அமெரிக்காவில் இந்த மாதிரி படங்கள் நிறைய வந்துள்ளன. நம்மூரில் தான் இதை சரியாக கொண்டு செல்லவில்லை. இதற்கு முன் சதிலீலாவதி, மன்மத லீலை போன்ற பல படங்களை நம் இயக்குனர்கள் கொடுத்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை இயக்குனர்கள் தொட்டு விட்டால், அதன் பின் எந்த மாதிரியான படமும் எடுக்கலாமா?
அப்படியெல்லாம் இல்லை. நான் கதைக்கு தான் முக்கியத்துவம் தருவேன். பட்ஜெட், நாயகன் எல்லாம் இரண்டாம் பட்சமே. அஜித், கார்த்தி, சூர்யா, சிம்பு என யார் எடுத்தாலும், அவர்களை வித்தியாசமாகவே காட்டினேன். அவர்கள் செய்யாத பாத்திரத்தை தரும் போது அவர்களுக்கும் ஒருஉற்சாகம் வரும். அஜித்தை மங்காத்தா வில் வில்லனாக மாற்றியது போல், நமக்கும் சவாலாக இருக்கும். ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கிடைக்கும்.
தமிழில் நல்ல கதைகள் அதிகம் வருவதில்லையே ஏன்?
இங்கு எழுத்தாளர்கள் எல்லாம் இயக்குனர்களாகிவிட ஆசைப்படுகின்றனர். முன்னாடி பாரதிராஜா, கே.பி., சார் எல்லாருக்கும் எழுத்தாளர்கள் இருந்தனர். இன்று எல்லாமே ஒருவரே செய்வதால், நல்ல கதைகளுக்கு பஞ்சமாகி விடுகிறது.
பெரிய பட்ஜெட் படங்களுக்கும், கதைக்கான படங்களுக்கும் வித்தியாசம் என்ன?
மலையாளப் படங்கள் பெரிய பட்ஜெட் இல்லை. கதையை மட்டுமே நம்புகின்றனர். த்ரிஷ்யம் படம் பெரிய பட்ஜெட் படமில்லை; ஆனால் அப்படம் சீன மொழியிலும் வெளியானது. பெரிய பட்ஜெட் படம் மட்டுமே, பேசப்படும் படமாகாது. கே.ஜி.எப்., படம் தான், உலகையே கன்னட திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. இதற்கு கதை தான் காரணம். இந்த கொரோனா காலத்தில் ஓ.டி.டி.,க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நிறைய கதைக்களை அருமையாக மலையாள திரையுலகினர் கொடுத்துள்ளனர்.
அப்பா உங்களை மிரட்டுகிறாராமே?
மாத செலவுக்கு காசு அனுப்ப சொல்வார். தாமதமானால், நான் முதலில் இயக்கிய பூஞ்சோலை என்ற படத்தை வெளியிட்டு விடப்போவதாக மிரட்டுவார்.
இசையில், அப்பாவும் இளையராஜாவும் மீண்டும் இணைவார்களா?
விரைவில் என் அடுத்த படத்தில் அப்பாவும், இளையராஜாவும் இசையில் இணைந்து பணிபுரிவர்.
- -நமது நிருபர் --