ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தமிழில் 'குக்கூ' திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. ஏற்கனவே இவர் 'செல்லுலாய்டு' என்ற மலையாள படத்தில் பாடல்கள் பாடி அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் படங்களில் பாடிய பிறகே பிரபலமானார்.
'வீரசிவாஜி' என்ற படத்தில் இவர் பாடிய 'சொப்பன சுந்தரி நான் தானே ... சொப்பன லோகத்தின் தேன் தானே' என்ற பாடலும், ஜெய்பீம் படத்தில் 'மண்ணிலே ஈரம் உண்டு முள் காட்டில் பூவும் உண்டு' என்ற பாடலும், தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த பாடலாகும். கடந்த ஆண்டு கேரள அரசின் கேரளஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
சமீபத்தில் கோவை வந்திருந்த வைக்கம் விஜயலட்சுமியை சந்தித்து பேசினோம்...
எந்த வயதில் பாட துவங்கினீர்கள்?
எனக்கு எல்லாமே சங்கீதம்தான். ஐந்து வயதில் கர்நாடக இசை கற்றுக்கொள்ள துவங்கினேன். அன்றில் இருந்து இசையை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். காரணம் இசை கடல் போன்றது. அதை யாரும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது.
சமீபத்தில் நீங்கள் பாடிய புதிய படங்கள் பற்றி?
தமிழில் அரண்மனை 3, நீலகண்டா ஆகிய படங்களில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பாடி இருக்கிறேன். மலையாளத்தில் மூன்று படங்களில் பாடி இருக்கிறேன். இன்னும் சில படங்கள் உள்ளன.
இன்னும் எந்த இசை அமைப்பாளர் இசையில் பாட விருப்பம்?
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பட வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. அவர்கள் இசையில் பாடும் நாள் எனக்கு இனிய நாளாக இருக்கும்.