'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
பிரபல பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரி. ஓம் சாந்தி ஓம், எனிமி, தி பவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார், பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு யுவிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். யுவிகா சவுத்ரி தனது டுவிட்டர் பதிவில், நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து பரப்பப்பட்டுள்ளது யாருடைய மனதையும் நான் காயப்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவர் மீதும் எனக்கு நிறைய அன்பு உள்ளது. என்று தெரிவித்தார்.
என்றாலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹன்சி போலீசார் நேற்று யுவிகா சவுத்ரியை திடீரென கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மாலையில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.