சூர்யா படத்துடன் மோதும் ‛ஹாய்' | அதிர்ஷ்டம் இல்லாத நடிகையா : பாக்யஸ்ரீ போர்ஸ் கொடுத்த பதிலடி | ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அதிர்ச்சி கொடுத்த ஓ சுகுமாரி | ரூ.50 கோடி வசூலில் 'கட்டா குஸ்தி 2' | ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்துக்கு 10, இளையராஜாவுக்கு 5 : எம்.எஸ்.விக்கு ஒன்று கூட இல்லை | அமரன் படத்தில் மிஸ்சிங் ராமாயணாவில் கிடைக்குமா? | ஆகஸ்ட் மாதம் தொடங்குமா அஜித் படம்? | தமிழில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் கன்னட நடிகை | யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார் அனுபமா பரமேஸ்வரன் : விடுதலையாகி விட்டதாக திடீர் பதிவு | ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் தமிழ் படம் |

மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டார்கள். அதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன்கானுக்கு சில வாரங்களாக ஜாமீன் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. மேலும் ஆரியன்கானை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவரு க்கு ரூ 8 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதையடுத்து அந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வான்கடே வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் அதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஆரியன்கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை டில்லியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள வான்கடே, தன்னை பணியிடமாற்றம் செய்யவில்லை என்றும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.