2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டார்கள். அதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன்கானுக்கு சில வாரங்களாக ஜாமீன் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. மேலும் ஆரியன்கானை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவரு க்கு ரூ 8 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதையடுத்து அந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வான்கடே வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் அதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஆரியன்கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை டில்லியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள வான்கடே, தன்னை பணியிடமாற்றம் செய்யவில்லை என்றும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.