ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென சென்று பார்வையிட்டார். அங்கு அவர் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அது எப்படி இயங்குகிறது என்று அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
அதன் பிறகு அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் சல்மான்கான் எழுதியதாவது: நான் இங்கு வந்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒருபோதும் மறக்க முடியாத இடமாக உள்ளது. நூற்பு ராட்டினத்தை காந்தி பயன்படுத்தினார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகும். தேசத் தந்தை காந்திஜியின் ஆன்மாவுக்கு இந்த இடம் அமைதி தரும். மீண்டும் நான் இங்கு வருவேன். அப்போது இங்கு நிறைய கற்றுக்கொள்வேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
சல்மான்கானுக்கு காந்தி ஆசிரம நிர்வாகம் சார்பில் கொத்து நூல் பரிசாக வழங்கப்பட்டது. அதனை அவர் தனது கையில் சுற்றிக் கொண்டார். சல்மான்கான் காந்தி ஆசிரமம் வந்து தகவல் தெரிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆசிரமத்தின் முன்பு கூடினார்கள்.