இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென சென்று பார்வையிட்டார். அங்கு அவர் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அது எப்படி இயங்குகிறது என்று அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
அதன் பிறகு அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் சல்மான்கான் எழுதியதாவது: நான் இங்கு வந்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒருபோதும் மறக்க முடியாத இடமாக உள்ளது. நூற்பு ராட்டினத்தை காந்தி பயன்படுத்தினார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகும். தேசத் தந்தை காந்திஜியின் ஆன்மாவுக்கு இந்த இடம் அமைதி தரும். மீண்டும் நான் இங்கு வருவேன். அப்போது இங்கு நிறைய கற்றுக்கொள்வேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
சல்மான்கானுக்கு காந்தி ஆசிரம நிர்வாகம் சார்பில் கொத்து நூல் பரிசாக வழங்கப்பட்டது. அதனை அவர் தனது கையில் சுற்றிக் கொண்டார். சல்மான்கான் காந்தி ஆசிரமம் வந்து தகவல் தெரிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆசிரமத்தின் முன்பு கூடினார்கள்.